தினகரனை நீக்கி ஓபிஎஸ் அணியின் கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடி கோஷ்டி
அணிகளை இணைக்க ஓபிஎஸ் விதித்த நிபந்தனைகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ளது எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி.
சென்னை: டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று தீர்மானம் போட்டதை அடுத்து ஓபிஎஸ் அணியின் ஒரு கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது எடப்பாடி கோஷ்டி.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிளவு பட்டது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணியாக பிரிந்தது. ஆர். கே.நகர் இடைத்தேர்தலின் போது இரு அணிகளுமே தனித்தனியாக களமிறங்கின. இருவருமே கட்சி, கொடி,சின்னத்திற்கு மோதவே, தேர்தல் ஆணையம் இரட்டை இலை, கொடியை முடக்கியது.

ஓபிஎஸ் நிபந்தனை
இதனையடுத்து அணிகளை இணைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு கிளம்பியது. இதற்கு ஓபிஎஸ் அணி இரண்டு நிபந்தனைகளை விதித்தது. ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்றும், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறினார்.

பேச்சு வார்த்தையில் இழுபறி
இதற்கு முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் படங்கள் அகற்றப்பட்டன. ஆனால் இருவரையும் ஒதுக்கி வைப்பதாகத்தான் கூறினர். ஆனால் இணைப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது.

தினகரனுக்கு எதிரான தீர்மானம்
இந்த சூழ்நிலையில் அதிமுக அம்மா அணியே இரண்டாக பிளவு பட்டுள்ளது. தினகரன் தலைமையில் ஒரு அணி செயல்படுகிறது. தினகரன் தன்னிச்சையாக கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். டிடிவி தினகரன் நியமனம் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது எட்ப்பாடி பழனிச்சாமி கோஷ்டி.

ஒபிஎஸ் கோஷ்டிக்கு சாதகம்
இதன்மூலம் ஓபிஎஸ் அணிக்கு சாதகமாக ஒரு கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி. இதன் மூலம் அணிகள் இணையுமா? அல்லது தினகரன் ஆதரவாளர்களால் கலகம் உருவாகி ஆட்சி கலையுமா என்பதே அரசியல் நோக்கர்களின் கேள்வி.

அவசர ஆலோசனை
இதனிடையே சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக துணைப் பொது செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என எடப்பாடி கோஷ்டி கூறியதையடுத்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications