அண்ணா, எம்ஜிஆர், ஜெ. நினைவிடங்களில் முதல்வர் எடப்பாடியார் மரியாதை
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சமாதிகளில் மலர் வளையம் வைத்து இன்று மாலை அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சமாதிகளில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை இன்று பதவியேற்றது. முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்புக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தார். அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அண்ணா, எம்.ஜி.ஆர்.சமாதிகளிலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரனும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications