டெல்லி சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா... வந்தார், பார்த்தார், செல்கிறார்... என்னாகும் தேர்தல்?
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட விக்ரம் பத்ரா அரசியல் கட்சியினர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் டெல்லி புறப்பட்டு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய தேர்தல் ஆணைய இயக்குனர் விக்ரம் பத்ரா சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை முடித்த நிலையில் அவசரமாக டெல்லி புறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறும் நிலையில் வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தால் ஆர்கே நகரில் திரும்பிய திசையெல்லாம் கட்சிகொடிகள் பறக்கின்றன. இந்நிலையில் பணப்பட்டுவாடா தொடர்பாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அனைத்து கட்சிகள் சார்பிலும் முன் வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட இந்திய தேர்தல் ஆணைய இயக்குனர் விக்ரம் பத்ரா கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சென்னை வந்தார். தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், அரசியல் கட்சிகளுடனும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனிடையே வாக்குப்பதிவிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா அவசரமாக டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்கே நகர் நிலவரம் குறித்து அவர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளிப்பார் என்று தெரிகிறது. இதனால் இடைத்தேர்தலுக்கு தடை ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த இடைத்தேர்தலும் 2 நாட்களுக்கு முன்னர் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications