பல்லாவரம் நகராட்சியில் ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட வெள்ளம்.. ஆதாரங்களை அளித்த பிறகும் அசையாத அதிகாரிகள்
ஏரிக்கு செல்ல வேண்டிய கால்வாய்கள் வழியிலேயே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுதான் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னை: பாட்டை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததன் காரணமாக, பல்லாவரம் நகராட்சி பகுதியின் பல பகுதிகளில் வெள்ள நீர் சேர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர், பிரசன்னா வெங்கடரத்னம் நமக்கு ஆதாரங்களோடு தகவல்களை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் பேசினோம். "2012 முதலே இதுதொடர்பாக பல்வேறு புகார்களை கொடுத்த பிறகும்கூட, அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை" என்று ஆதங்கப்படுகிறார்.

ஆக்கிரமிப்புகளால் வெள்ளம்
பல்லாவரம் நகராட்சி, வார்டு எண்17 பகுதிக்கு உட்பட்ட ஸ்வாமிமலை நகர், எம்கே நகர், பெருமாள் நகர் எஸ்க்டென்ஷன், ஸ்வாமிமலை எக்ஸ்டென்ஷன், ஏஜிஎஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்கள் அவதிப்பட காரணம் இந்த ஆக்கிரமிப்புகள்தான் என்பது குற்றச்சாட்டு.

ஏரிக்கு நீர் செல்லவில்லை
ஏரிக்கு செல்ல வேண்டிய கால்வாய்கள் வழியிலேயே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுதான் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய காரணம் என்று கூறப்படுகிறது. சர்வே எண் 91/8 பகுதியிலுள்ள பாட்டை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளதை ஆதாரத்தோடு அதிகாரிகளிடம் அளித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இடத்தை காலி செய்யும் மக்கள்
நேற்று பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து கிளம்பும் நிலை உருவாக இந்த ஆக்கிரமிப்புகள்தான் காரணம். எப்போது வெள்ளம் ஏற்பட்டாலும், இப்பகுதி மக்களுக்கு இதே பாதிப்பு தொடருகிறது.

நடவடிக்கை எடுப்பார்களா?
ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கையை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும். அதிகாரிகள் இப்போதாவது மக்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications