பந்தைப் பார்த்து வெடிகுண்டு என பயந்த மக்கள் - மர்மநபர்களால் ஈரோட்டில் பதட்டம்
ஈரோடு: பேருந்து நிலையம் அருகே சாலையில் கிடந்த மர்மப் பொருளை பொதுமக்கள் வெடிகுண்டு எனக் கருதி போலீசாருக்கு தகவல் அளித்ததால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் சோதனைக்குப் பின்னர் அது நூல் பந்து எனக் கண்டுபிடிக்கப் பட்டது.
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், கரூர் செல்லும் பஸ்கள் வெளியே வரும் சாலையில், இன்று அதிகாலை நாட்டு வெடிகுண்டு போல் ஒரு மர்ம பொருள் கிடந்தது. நூல்களால் சுற்றப்பட்ட அந்தப் பந்தில் ஒரு திரியும் இணைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியில் சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த மர்மப் பொருளை மீட்டனர். பின்னர், போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் (பொறுப்பு) முன்னிலையில் வெடிகுண்டு போல் காணப்பட்ட அந்த மர்ம பொருளை தண்ணீருக்குள் போட்டனர்.
இதற்கிடையே தகவலறிந்து வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். தொடர்ந்து அவர்கள் நடத்திய சோதனையில், சாலையில் கண்டெடுக்கப்பட்ட பொருள் வெறும் துணி மற்றும் நூலால் கட்டப்பட்டது பொருள் தான். வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. பிறகு அந்த பந்து போன்று இருந்த பொருளை போலீசார் பிரித்து தூக்கி வீசினர்.
பொதுமக்களை பயமுறுத்தும் நோக்கில் நூல் பந்தை வெடிகுண்டு போல் சித்தரித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications