For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோப்புக் கம்பெனியில் பழகி... கோவிலில் மாலை மாற்றி... போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த காதல் ஜோடி!

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோட்டில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஓடிவந்து கோவிலில் திருமணம் புரிந்த ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்துள்ளது.

ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் பழனி சாமி, கூலித் தொழிலாளி. இவரது மகள் சத்யா. ஈரோடு சூளை பகுதியை சேர்ந்தவர் தாமோதரன்.

Erode lovers recourse in police station

சத்யாவும், தாமோதரனும் ஒரு சோப்பு கம்பெனியில் வேலை பார்த்தனர். அப்போது அவர்கள் இடையே பழக்கம் காரணமாக காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரிய வந்தது. இதனால் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதைதொடர்ந்து காதல் ஜோடி பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியது. பின்னர் திருச்செங்கோட்டில் உள்ள கோவிலில் காதல் ஜோடியினர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து காதல் ஜோடி இருவரும் தஞ்சம் அடைந்தனர். தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால், பாதுகாப்பு வழங்கி வாழ வைக்கும்படி அவர்கள் கேட்டு கொண்டனர். காதல் ஜோடியிடம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா விசாரணை நடத்தி வருகிறார்.

English summary
Lovers got married in Temple and surrender in police station for safety.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X