ஜெ. மறைவுக்கு பிறகு தமிழகத்தில் நடப்பது எல்லாம் மர்மமாக உள்ளது: திருநாவுக்கரசர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் நடப்பது அனைத்தும் மர்மமாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

முன்னாள் தலைமைச் செயலாளரான ராம மோகன ராவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில் தவறு எதுவும் இல்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு தெரியப்படுத்தாமல் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் நடப்பது அனைத்தும் மர்மமாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications