தென்காசி: மக்களே உஷார்… தியேட்டரில் காலாவதி தின்பண்டம்.. கேள்வி கேட்ட பொதுஜனம்.. வைரல் வீடியோ..!
தென்காசி: சங்கரன்கோவில் தனியார் திரையரங்கில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்ததாக படம் பார்க்க சென்றவர் தியேட்டர் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
Recommended Video
கொரோனா ஊரடங்கு காரணமாக பத்து மாதங்களுக்கு மேலாக சினிமா திரையரங்குகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் முதல் சினிமா திரையரங்கு 50 சதவீதம் பார்வையாளர்களை கொண்டு சினிமா ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதனையடுத்து நேற்று சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க சென்றவர்கள் இடைவேளைக்கு தியேட்டர் வளாகத்தில் உள்ள கடைகளில் தின்பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களை வாங்கி பருகினார்.
அப்போது அவைகள் அனைத்தும் 2019ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட காலாவதியான பொருட்கள் என்று தியேட்டர் உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு தியேட்டர் உரிமையாளரிடம் புகார் அளித்ததற்கு உரிய பதில் அளிக்காமல் நீங்கள் தெரிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுபோன்று காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் தியேட்டர் உரிமையாளர் மீது உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சினிமா ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications