லஞ்ச வழக்கில் சஸ்பெண்ட்: எழும்பூர் அரசு கண் மருத்துவமனை மாஜி இயக்குநர் டாக்டர் ஸ்ரீதர் தற்கொலை
எழும்பூர் அரசு கண் மருத்துவமனை முன்னாள் இயக்குநர் டாக்டர் ஸ்ரீதர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: லஞ்சம் பெற்ற வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எழும்பூர் அரசு கண் மருத்துவமனை முன்னாள் இயக்குநர் டாக்டர் ஸ்ரீதர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பொன்னேரி அருகே நண்பரின் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்வையற்ற மாற்று திறனாளி பட்டத்தாரி இளைஞர் ஒருவருக்கு சான்றிதழ் வழங்க 200 ரூபாய் லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோ வெளியான விவகாரத்தில் எழும்பூர் கண் மருத்துவமனை இயக்குநரை சஸ்பெண்ட் செய்ய கடந்த செப்டம்பர் மாதம் பரிந்துரைக்கப்பட்டது. அக்டோபர் மாதம் டாக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பார்வையற்ற மாற்று திறனாளிகள் வேலை வாய்ப்பு பெறவும், இன்ன பிற அரசு சலுகைகளை பெறவும் அரசு கண்மருத்துவமனை இயக்குநரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
இந்த சான்றிதழை பெற எழும்பூர் ருக்குமணி லஷ்மிபதி சாலையில் உள்ள அரசு கண் மருத்துவமனை இயக்குநரகத்தில் சான்றிதழ் கோரி 41 சதவீதம் பார்வை குறைபாடு உள்ள இளைஞர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.
அவரிடம் கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஸ்ரீதர் லஞ்சம் வாங்கும் வீடியோவை அறப்போர் இயக்கத்தினர் வெளியிட்டனர். 500 தன்னிடம் இல்லை என்று பார்வையற்ற மாற்றுத் திறனாளி இளைஞர் தெரிவித்தும், 500 கூட இல்லாமல் ஏன் வருகிறாய் என்று ஏளனமாக பேசிய டாக்டர் ஸ்ரீதர் விடாப்பிடியாக கையில் வைத்திருந்த 200 ரூபாயை தனது உதவியாளர் மூலம் வாங்கி கொண்ட பிறகே சான்றிதழ் வழங்கியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஸ்ரீதரிடம், தமிழக மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ விளக்கம் கேட்டார். வீடியோ ஆதாரத்துடன் சுகாதார செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள டாக்டர் எட்வின் ஜோ, டாக்டர் ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்யவும் பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில் டாக்டர் ஸ்ரீதர் கடந்த அக்டோபர் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டாக்டர் ஸ்ரீதர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் டாக்டர் ஸ்ரீதர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications