பொது இடத்தில் சரக்கடித்தவரை தட்டிக்கேட்ட போலீஸை திரண்டு வந்து உதைத்த குடும்பம்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பொது இடத்தில் சரக்கடிக்க கூடாது என்று சொன்ன போலீஸ்காரருக்கு உருட்டு கட்டையால் அடி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். தமிழக காவல்துறையில் காவலராக பணியாற்றும் இவர் கடந்த ஆறு மாதத்துக்கு முன் கோவை மாவட்டம் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து சூலுார் காவல் நிலையத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு 12:45 மணிக்கு சிந்தாமணிப்புதுார் சத்தியநாராயணா நகர் பகுதியில் ஊர்க்காவலர் படையை சேர்ந்த குணசேகரன் என்பவருடன் கண்ணன் காவல் பணிக்காக சென்றார்.
அப்போது, அங்குள்ள மளிகை கடையின் முன்பு ஒருவர் அமர்ந்து கொண்டு மது அருந்திக்கொண்டிருந்தார். அங்கு சென்ற கண்ணன் பொது இடத்தில் உட்க்கார்ந்து மது அருந்தக்கூடாது என்று கூறி அவரை அங்கிருந்து போகும்படி கூறியுள்ளார்.
இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் மது அருந்திக்கொண்டிருந்தவர் எழுந்து திடீரென காவலர் கண்ணனை சரமாரியாகத் தாக்கத் துவங்கினார். சத்தம் கேட்டு அங்கு வந்த அந்த நபரின் சகோதரரும், தாயும் கட்டையால் சேர்ந்து கண்ணனை தாக்கியுள்ளனர்.
இதனால் காயமடைந்த கண்ணன் சூலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்து சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ண்ணனைத் தாக்கிய மளிகை கடை உரிமையாளர் பொன்சிங், அவரது சகோதரர் செல்வசிங், தாய் சாந்தி ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications