திருச்சி முக்கொம்புக்கு வந்தது காவிரி நீர்- மலர்த் தூவி வரவேற்ற விவசாயிகள்
முக்கொம்புக்கு காவிரி நீர் வந்தது. இதையடுத்து விவசாயிகள் மலர்த்தூவி வரவேற்றனர்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி முக்கொம்புக்கு காவிரி நீர் வந்தது.இதையடுத்து விவசாயிகள் மலர்த்தூவி வரவேற்றனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை நிரம்பியது. இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து கபினி அணைக்கு நீர் திறந்துவிடப்பட்டது.
இதையடுத்து கபினி அணையிலிருந்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் வந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழுவதையும் எட்டியது.

இந்நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதால் அதன் மதகுகளை கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார். இதையடுத்து காவிரி நீர் திருச்சிக்கு இன்று வந்தடைந்தது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நீரை மலர்த்தூவி வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications