காவிரி மேலாண்மை வாரியம் அமையாததைக் கண்டித்து நாகையில் விவசாயிகள் மரத்தில் தூக்குப் போடும் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமையாததைக் கண்டித்து நாகையில் விவசாயிகள் மரத்தில் தூக்குப் போடும் போராட்டம் நடத்தினர்.
நாகப்பட்டிணம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நாகை மாவட்டத்தில் விவசாயிகள் மரத்தில் தூக்குப் போடும் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்குத் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தியது. அதற்கு ஆறு வார கால அவகாசமும் கொடுத்தது. உச்சநீதிமன்றம் கொடுத்த ஆறு வார கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், இதுவரை மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை.

இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் விவசாயிகள் மத்திய அரசைக் கண்டித்து தூக்குப் போடும் போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் மரத்தில் தூக்கு மாட்டி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அங்கிருந்த ஆறு விவசாயிகளைக் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications