சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

Subscribe to Oneindia Tamil

சிவகாசி: சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை முற்றிலுமாக தரைமட்டமானது. உயித்சேதமோ, காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சிக்குட்பட்ட போர்ரெட்டிபட்டி என்ற கிராமத்தில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று காலை தொழிலாளர்கள் இயந்திரத்தில் மருந்து கலக்கிக் கொண்டிருக்கும் போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

Fire accident at Sivakasi

இந்த விபத்தில் மருந்து கலக்கும் இயந்திரம் மற்றும் ஒரு அறை தரைமட்டமானது. காலை நேரம் என்பதால் பணியாட்கள் யாரும் வராததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மாரனேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன. அடிக்கடி இங்கு வெடிவிபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முதலிப்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 50 பேர் பலியானார்கள், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளினால் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள் நிகழ்ந்தாலும் உயிர்சேதம் தவிர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+