இலங்கை கடற்படையிடம் சிக்கிய தமிழக மீனவர்.. பாட்டிலை விழுங்கி தற்கொலை முயற்சி
நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களில் ஒரு மீனவர் பாட்டிலை உடைத்து விழுங்கி தற்கொலைக்கு முயற்சி.
கோடியக்கரை: கோடியக்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து திரிகோணமலையில் அடைத்து வைத்துள்ள விவகாரத்தில் ஒரு மீனவர் தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். அக்கறைப் பேட்டையைச் சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான படகில், 8 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களது படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், மீனவர்களையும் அவர்கள் சென்ற படகையும் சிறைபிடித்தனர். இந்த நிலையில் நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் பிடியில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்வதால் மீனவர் கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த 8 பேரில் ஒரு மீனவர், பாட்டிலை உடைத்து அதை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எஞ்சிய 7 மீனவர்கள் திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு 18 மீனவர்களையும், 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இலங்கை கடற்படையின் அட்டகாசத்தால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications