அடுத்த 45 நாளைக்கு வஞ்சிர மீனை நினைச்சுக் கூட பார்க்க முடியாது போலிருக்கே!
தூத்துக்குடி: ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க தடைக் காலம் தொடங்கியது. இதனால் மீன்பிடி படகுகள் துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க 45 நாள் தடை விதிக்கப்படும்.

இந்த ஆண்டு தடைக்காலம் நேற்று மாலை முதல் தொடங்கியது. இந்த தடை காலம் ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி வரை அமுலில் இருக்கும். தடைக்காலம் தொடங்கியதை அடுத்து தூத்துக்குடியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.
அவை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தடை காலத்தில் நேரடியாக 5 ஆயிரம் மீனவர்களும் மறைமுகமாக 15 மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர். தடை காலத்தில் விசைப் படகு மீனவர்கள் தொழில் மற்றும் வருமானத்தை கருத்தில் கொண்டு அரசு அவர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கி வருகிறது.
இந்த தொகை போதாது என்றும், தினமும் ரூபாய் 250 என தரவேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே மீன்பிடி தடை காலத்தை அரசு 45 நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்தி விட்டதாக தகவல்கள் வெளியானதால் தூத்துக்குடி மீனவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து மீன்பிடி தொழிலாளர் சங்க தலைவர் கூறுகையில், தற்போது கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீன்களின் இனப்பெருக்க காலமும் மாறியுள்ளதாக தெரிகிறது.
இதை முன்னிட்டு மீன்பிடி தடை காலம் தொடர்பாக ஆய்வு செய்து மறு பரீசிலனை செய்ய வேணடும் என்று கோரி வருகிறோம். தடை காலமே தேவையில்லை என்னும் போது 45 நாளில் இருந்து தடை காலத்தை 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை நாங்கள் ஏற்று கொள்ள முடியாது என அவர் தெரிவத்தார். இதனால் மீன்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அசைவ பிரியர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications