அடுத்த 45 நாளைக்கு வஞ்சிர மீனை நினைச்சுக் கூட பார்க்க முடியாது போலிருக்கே!
தூத்துக்குடி: ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க தடைக் காலம் தொடங்கியது. இதனால் மீன்பிடி படகுகள் துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க 45 நாள் தடை விதிக்கப்படும்.

இந்த ஆண்டு தடைக்காலம் நேற்று மாலை முதல் தொடங்கியது. இந்த தடை காலம் ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி வரை அமுலில் இருக்கும். தடைக்காலம் தொடங்கியதை அடுத்து தூத்துக்குடியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.
அவை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தடை காலத்தில் நேரடியாக 5 ஆயிரம் மீனவர்களும் மறைமுகமாக 15 மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர். தடை காலத்தில் விசைப் படகு மீனவர்கள் தொழில் மற்றும் வருமானத்தை கருத்தில் கொண்டு அரசு அவர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கி வருகிறது.
இந்த தொகை போதாது என்றும், தினமும் ரூபாய் 250 என தரவேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே மீன்பிடி தடை காலத்தை அரசு 45 நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்தி விட்டதாக தகவல்கள் வெளியானதால் தூத்துக்குடி மீனவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து மீன்பிடி தொழிலாளர் சங்க தலைவர் கூறுகையில், தற்போது கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீன்களின் இனப்பெருக்க காலமும் மாறியுள்ளதாக தெரிகிறது.
இதை முன்னிட்டு மீன்பிடி தடை காலம் தொடர்பாக ஆய்வு செய்து மறு பரீசிலனை செய்ய வேணடும் என்று கோரி வருகிறோம். தடை காலமே தேவையில்லை என்னும் போது 45 நாளில் இருந்து தடை காலத்தை 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை நாங்கள் ஏற்று கொள்ள முடியாது என அவர் தெரிவத்தார். இதனால் மீன்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அசைவ பிரியர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications