மிரட்டும் வெள்ளம்... படிப்பதில் பிடிவாதம்... படகில் பள்ளிக்குப் போகும் மாணவர்கள்...
வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் வெள்ளம் சூழ்ந்துள்ளபோதும் கல்வி கற்றாக வேண்டும் என்பதற்காக படகில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
வேதாரண்யம் அருகே உள்ள வண்டல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் அருகே உள்ள அவரிக்காடு பள்ளிக் கூடத்துக்கு சென்று படித்து வந்தனர்.

ஆனால் பருவமழையால் வண்டல் கிராமம் வெள்ளத்தில் மிதந்தது. இதனால் பள்ளிக்கூடம் செல்லாமல் கிராமத்திலேயே முடங்கிக் கிடக்க மாணவர்கள் விரும்பவில்லை.
மழை வெள்ளம் வடியும்வரை வெளி இடங்களுக்குச் செல்ல பொதுமக்கள் மீன்பிடி படகை பயன்படுத்த தொடங்கினர். பின்னர் அரசே படகையும் இயக்கியது.
மாணவர்களும் படித்தே ஆக வேண்டும் என்பதற்காக படகுகளில் பயணித்து பள்ளிக்கூடம் சென்று வந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக ஆசிரியர்களும் வந்து சென்றனர். இந்நிலையில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களிடம் படகு கட்டணமாக ரூ10 வசூலிப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ஒரு புகாரும் போனது.
இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் கல்வித்திட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி பார்வதி அவரிக்காடு கிராமத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வண்டல் கிராமத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் அவுரிக்காடு செல்லும் வகையில் படகு இயக்கப்படுகிறது.
இந்த படகில் பயணம் செய்யும் மாணவ, மாணவிகள், பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது; படகில் பயணம் செய்யும் மாணவர்கள் பாதுகாப்புக்காக ஆசிரியர் ஒருவர் உடன் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications