சீர்காழி கொள்ளிட கரையோர பகுதியில் வெள்ளம்: அடித்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி.. மீட்பு பணி தீவிரம்
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளநீர் கரையோர கிராமங்களில் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
நாகை: சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளநீர் கரையோர கிராமங்களில் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டோடுகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

நேற்று உடைப்பு
சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் திட்டுக்காட்டூர், அக்கரை, பொரம்பட்டு, ஜெயங்கொண்டம் பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது.

கரைகளை தாண்டி வெள்ளம்
700க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். இந்நிலையில் இன்று சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று நீர் கரைகளை தாண்டி கிராமங்களில் சூழ்ந்துள்ளது.

வெளியேற முடியாமல் தவிப்பு
நாதல்படுகை, நாணல்படுகை, வெள்ளை மணல் திட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் வெளியேற முடியாமல் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அடித்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி
இதைத்தொடர்ந்து கொள்ளிடக் கரையோரம் வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை படகுகள் மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாற்றுத்திறனாளி ஒருவர் மரத்தில் சிக்கினார். அவரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications