சீர்காழி கொள்ளிட கரையோர பகுதியில் வெள்ளம்: அடித்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி.. மீட்பு பணி தீவிரம்
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளநீர் கரையோர கிராமங்களில் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
நாகை: சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளநீர் கரையோர கிராமங்களில் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டோடுகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

நேற்று உடைப்பு
சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் திட்டுக்காட்டூர், அக்கரை, பொரம்பட்டு, ஜெயங்கொண்டம் பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது.

கரைகளை தாண்டி வெள்ளம்
700க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். இந்நிலையில் இன்று சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று நீர் கரைகளை தாண்டி கிராமங்களில் சூழ்ந்துள்ளது.

வெளியேற முடியாமல் தவிப்பு
நாதல்படுகை, நாணல்படுகை, வெள்ளை மணல் திட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் வெளியேற முடியாமல் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அடித்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி
இதைத்தொடர்ந்து கொள்ளிடக் கரையோரம் வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை படகுகள் மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாற்றுத்திறனாளி ஒருவர் மரத்தில் சிக்கினார். அவரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications