ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது: முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது என முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது என முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கமளித்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கு விசாரணை ஆணையம் முன்பு இன்று காலை மீண்டும் ஆஜரான சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், அப்பல்லோவில் ஜெயலலிதா இருந்தபோது 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகக் கூறினார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சென்னை மாநகர காவல் ஆணையராக ஜார்ஜ் பணியில் இருந்தார். இதனால், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜார்ஜ்ஜை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. அதன்படி, ஜார்ஜ் நேற்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளித்தார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் ஜார்ஜ்ஜிடம் விசாரணை நடத்த வேண்டியிருந்ததால் வியாழக்கிழமை மீண்டும் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று வியாழக்கிழமை காலை மீண்டும் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளித்தார். அவரிடம் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர்.ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜார்ஜ் அளித்த விளக்கம் குறித்து ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:
விசாரணை ஆணைய வழக்கறிஞர்கள் ஜார்ஜிடம் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்ற கேள்விக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது மருத்துவமனையில் நான்கு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதாவின் பாதுகாப்பு விவகாரத்தில் ஒருங்கிணைந்த ஆலோசனைக்கூட்டம் நடத்தவில்லை என்று ஜார்ஜ் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
-
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications