பிரான்ஸ் தினம் கொண்டாட்டம்.. புதுச்சேரியில் கோலாகலம்
Recommended Video

புதுச்சேரி: பிரான்ஸ் நாட்டின் 229வது தேசிய தினம், புதுச்சேரியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பிரெஞ்சு வசம் முன்பு இருந்த பகுதிதான் புதுச்சேரி. பின்னர் இந்தியாவுடன் இணைந்து விட்டாலும் கூட, பிரெஞ்சு தேசிய தினம் உள்ளிட்டவை இங்கும் விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

புதுச்சேரியிலுள்ள போர் நினைவுச் சின்னத்திற்குச் சென்று பிரெஞ்சுக்காரர்கள், அங்குள்ள வீரர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நினைவிடத்தை பிரான்ஸ் அரசே பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் வசித்து வரும் பல்வேறு முன்னாள் பிரெஞ்சு ராணுவ, அரசு அதிகாரிகளும் இங்கு அஞ்சலி செலுத்தினர். பல்வேறு பிரான்ஸ் அமைப்புகள், பள்ளிக் கூடங்கள் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுச்சேரி காவல்துறையின் பான்டு வாத்தியப் பிரிவினர் புதுச்சேரி மற்றும் இந்திய தேசிய கீதங்களை இசைத்தனர். பிரெஞ்சு அலுவலகம் எதிரே இன்று இரவு 8.15 மணிக்கு வான வேடிக்கை நடத்தப்படுகிறதாம். இதேபோல காரைக்காலிலும் பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாடப்பட்டது.
பிரெஞ்சுப் புரட்சியின் தொடக்கத்தைதான் தேசிய தினமாக பிரான்ஸ் மக்கள் கொண்டாடுகின்றனர். 1789ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி பாரீஸில் உள்ள பாஸ்டில் சிறைச்சாலைக்குள் மக்கள் படையெடுத்துப் புகுந்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவித்தனர். அன்று தொடங்கியது பிரெஞ்சுப் புரட்சி. அதை நினைவு கூறும் வகையில்தான் இந்த தேசிய தினம் (Bastille day) கொண்டாடப்படுகிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications