80 ரூபாயை நோக்கி டீசல்.. 90 ரூபாயை நோக்கி பெட்ரோல்.. இன்றும் விலை உயர்ந்தது
பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து அதிக விலையில் விற்கிறது.
Recommended Video
சென்னை: பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து இன்றும் உள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பைக்கு நிகராக பெட்ரோல், டீசல் விலை சென்னையில் உயர வாய்ப்புள்ளது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து உயர்வை சந்தித்த விலை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. பெட்ரோல், டீசல் எண்ணெய் நிறுவனங்களே ஏற்றிக்கொள்ளலாம் கூறிய பின் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.
கடந்த இரண்டு மாதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்னும் அதிக உயர்வு ஏற்படும் என்று பொருளாதர நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது.இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் ஏற்பட்டு அதிகரித்தது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 காசுகள் உயர்ந்தது. தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.13காசுகளாகும். டீசல் விலை 56 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.17காசுகளாகும்.
மும்பையில் பெட்ரோல் விலை 88.50 ரூபாய்க்கு விற்கிறது. இந்தியாவிலேயே அங்குதான் பெட்ரோல் விலை அதிக அளவில் விற்கிறது.