தன்வந்திரி பீடத்தில் திருமண தடை நீங்கி குழந்தை பேறு தரும் யாகங்கள்
ஆண், பெண் திருமணத்தடை நீங்கவும் குழந்தை பாக்யம் பெறவும் பௌர்ணமியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற உள்ளது.
வேலூர்: பௌர்ணமியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபார்வதி யாகம், சந்தான கோபால யாகம் ஆகிய 3 யாகங்கள் நடைபெற உள்ளது.
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் திருமணம் நடைபெற்று, குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆணோ, பெண்ணோ ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தாலோ, 7ஆவது இடத்தில் பாதிப்புகள் இருந்தாலே திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்படும். மேலும் 7வது இடம், 5வது இடங்களில் பாவ கிரகங்களின் சேர்க்கை, பாவ கிரகங்களின் பார்வைகள் இருந்தாலும், திருமணம் நடைபெறுவதில் தடை, குழந்தை பேறு கிடைப்பதில் தடைகள் ஏற்படும்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக மக்களின் நலன் கருதி நாளை 31.03.2018 சனிக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால ஹோமம் ஆகிய மூன்று ஹோமங்கள் காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.
ஆண்களுக்கு திருமண யோகம்
திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பங்குபெறுபவர்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடக்க வழிவகை செய்கிறது. கடந்த 13 ஆண்டுகளில் ஏறக்குறைய சுமார் 2500க்கும் மேற்பட்ட கந்தர்வராஜ ஹோமங்கள் நடைபெற்று எண்ணற்ற ஆண்கள் பங்கு பெற்று பயனடைந்துள்ளார்கள்.
திருமண தடை நீங்கும்
திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டிசுயம்வரகலா பார்வதி யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது. திருமணத் தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.
பிரச்சினையின்றி பிரசவம்
பெண்களின் பிரசவத்திற்கு பல வகையான உபாயங்கள் உள்ளன. மஹா சந்தான கோபாலானை வழிப்பட்டால் மகப்பேறு கிடைக்கும் என்று நம்பிக்கை. ஸ்ரீ சந்தான கோபால ஹோமம் செய்வதன் மூலம் சுகமாக எத்தடையுமின்றி குழந்தையை பெற்றெடுக்கலாம். மேலும் அறிவு வாய்ந்த திறனுடையவர்களாக திகழ்வார். சந்தானகோபால ஹோமம் கர்ப்ப சிக்கல்கள்கட்டுப்படுத்த கிருஷ்ணர் ஆசிகள் பெறுவதற்கான ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
நாகதோஷம் நீங்கும்
இந்த ஹோமம் ஒரு ஆரோக்கியமான நிலையில் குழந்தை கருவுறும் முறைகள் வழங்குகிறது. இன்னும் பல நன்மைகளை பெற இந்த ஹோமத்தில் பங்குபெறலாம். மேலும், பெண் கருத்தடையும் பிரச்சனைகளை நீக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல், ஒரு குழந்தை பிறக்க, நாகதோஷம் மற்றும் கர்ம பிரச்சினைகள் இருந்து மீட்க விரும்புவோர் இந்த ஹோமம் செய்யலாம்.
கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியம்
சந்தான கோபால ஹோமம், சாத்தியமில்லாத கர்ப்ப பிரச்சினைகளை சமாளிக்க ஜாதகத்தில் கிரகங்கள் எதிர்மறை விளைவுகளை அகற்ற செய்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பெற்றெடுக்கும் போது ஏற்படக் கூடிய அபாயத்தைக் குறைக்கும். பெற்றோர் குழந்தைகள் திறமைகளை மேம்படுத்த இந்த ஹோமம் நடைபெறுகிறது. தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033,9443330203.