கடவுளே, கொஞ்சம் கருணைகாட்டப்பா: ரத்தக் கண்ணீர் வடிக்கும் சென்னைவாசிகள்
சென்னை: வெள்ளத்தில் சிக்கி அல்லல்படும் சென்னை மக்கள் கடவுளே கொஞ்சம் கருணை காட்டு என்று கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. ஏற்கனவே மக்கள் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அவர்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. திரும்பும் திசை எல்லாம் தண்ணீர், தங்க பாதுகாப்பான இடங்கள் இருந்தாலும் அங்கு செல்ல முடியாத அளவுக்கு சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் மக்கள் செய்வது அறியாது மழையில் நனைந்தபடி வீட்டு மாடிகளில் நின்று கொண்டு அதிகரிக்கும் வெள்ளத்தை பார்த்து பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். சென்னையில் உள்ள உறவினர்களின் பரிதாப நிலையை நினைத்து வெளிமாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் கவலையில் வேலை எதுவும் செய்ய முடியாமல் பதட்டமாக உள்ளனர்.

கடவுளே, ஏதாவது செய், தயவு செய்து மழையை நிறுத்து என்று சென்னை மக்கள் ரத்தக்கண்ணீர் வடிக்காத குறையாக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications