For Daily Alerts
Just In
திருச்சி விமான நிலையத்தில் 1.40 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - சுங்க அதிகாரிகள் அதிரடி
மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 1 கிலோ 40 கிராம் தங்கத்தினை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Recommended Video
சென்னை ஐஓபி வங்கியில் ரூ.32 லட்சம் கொள்ளை- வீடியோ
திருச்சி: திருச்சி விமானநிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தினை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசியாவிலிருந்து திருச்சி வந்திறங்கிய விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான பயணி ஒருவரை பிடித்து துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.
அதில் 1 கிலோ 40 கிராம் தங்கத்தினை மலேசியாவிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை அதிரடியாக கைது செய்த சுங்க அதிகாரிகள், கடத்தி வரப்பட்ட தங்கத்தினையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.32 லட்சம் என தெரியவருகிறது.
இதையடுத்து கைது செய்யப்பட்டவரிடம் தொடர் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Comments
English summary
Customs officials seized 1 kg 40 gram of gold worth Rs 32 lakh in Trichy Airport. Officials are investigating who has kidnapped gold from Malasiya.
Story first published: Monday, March 26, 2018, 11:45 [IST]