தமிழகத்தில் தற்போதைய நல்லாட்சி தொடர வேண்டும்... சொல்வது தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம்
தமிழகத்தில் தற்போதைய நல்லாட்சி தொடர வேண்டும் என்று தினகரன் அணியைச் சேர்ந்த எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.
பெருந்துறை: தமிழகத்தில் தற்போதைய நல்லாட்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று தினகரன் அணியின் எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏக்களை திரட்டி கலகக் குரல் கொடுத்தார். அமைச்சர் பதவிக்காகவே தோப்பு வெங்கடாசலம் குரல் கொடுப்பதாக கூறப்பட்டது.

அமைப்பு செயலர் பதவி
எடப்பாடி கோஷ்டியை வெறுப்பேற்றும் வகையில் தினகரனை தொடர்ந்து சந்தித்து வந்தார் தோப்பு வெங்கடாசலம். அவரை அதிமுகவின் அமைப்பு செயலர்களில் ஒருவராக தினகரன் நியமித்திருக்கிறார்.

புதிய நிர்வாகிகள் நியமனம்
இந்நிலையில் பெருந்துறையில் செய்தியாளர்களிடம் தோப்பு வெங்கடாசலம் கூறியதாவது: தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான தற்போதைய நல்லாட்சி தொடர வேண்டும். அதிமுகவை வலுத்தப்படுத்தவே புதிய நிர்வாகிகளை தினகரன் நியமித்திருக்கிறார்.

எய்ம்ஸ் மருத்துவமனை
கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் இருந்தபோது எனக்கு ஈரோடு மாவட்ட செயலாளர் பதவியை தருவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ஆனால் ஈரோடு மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.

கூட்டு குடிநீர் திட்டம்
அதிமுகவுக்கு 8 தொகுதிகளையும் பெற்றுக் கொடுத்த ஈரோடு மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பெருந்துறைக்கான கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தையும் விரைவாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு தோப்பு வெங்கடாசலம் கூறினார்.
-
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications