கோபாலபுரம் டூ காவேரி.. தொண்டர்களை அழ வைத்த கருணாநிதியின் இறுதி பயணம்
கருணாநிதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் காலமானார்.
Recommended Video
சென்னை: கருணாநிதி உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் கோபாலபுரத்தில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு பயணித்தது எப்படி என்பது குறித்த டைம்லைன் இதோ....
கருணாநிதிக்கு கடந்த ஜூலை 24-ஆம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் கோபாலபுரம் இல்லத்திலிருந்து காவேரி மருத்துவமனையில் பயணித்த இறுதி பயணம் குறித்த நினைவேடுகள்.
ஜூலை 27 - கருணாநிதிக்கு இரவு 11.30 மணிக்கு ரத்த அழுத்தம் குறைந்தது
ஜூலா 28 நள்ளிரவு 12 மணிக்கு - கருணாநிதியின் தனி மருத்துவர் கோபாலபுரம் வந்தார்
12.10 மணிக்கு - ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கோபாலபுரம் வந்தனர்
12.20 மணிக்கு - கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகரி கோபாலபுரத்துக்கு விரைந்தார்
12.30 மணிக்கு- முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் துரைமுருகன் ஆகியோர் கோபாலபுரத்துக்கு வந்தனர்
1 மணிக்கு - கருணாநிதியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கோபாலபுரம் இல்லம் வந்தது
1.20 மணிக்கு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்றது
1.30 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். நள்ளிரவு முதலே தொண்டர்கள் மருத்துவமனையை குவிய தொடங்கினர்
2.20 மணிக்கு- செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக தெரிவித்தார்.
2.30 மணிக்கு - கருணாநிதி உடல்நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனையின் முதல் அறிக்கை வெளியீடு. 20 நிமிடங்களில் ரத்த அழுத்தம் சீரானதாக தகவல்
2.35 மணிக்கு - தொண்டர்கள் நிம்மதி அடைந்து கலைந்தனர்
2.45 மணிக்கு - திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வருகை
காலை 10 மணிக்கு- மருத்துவமனைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகை
12.30 மணி- குலாம் நபி ஆசாத் வருகை
230 மணிக்கு- பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை
இரவு 8 மணிக்கு- காவேரி மருத்துவமனை 2ஆவது அறிக்கை வெளியீடு. உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்
ஜூலை 29 காலை 10.15 மணிக்கு- மேற்கு வங்க திரிணமூல் கட்சி எம்பி டெரிக் ஓ பிரையன் வருகை
10.45 மணிக்கு - பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் , தமிழிசை வருகை
12.20 மணிக்கு- குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வருகை
12.30 மணிக்கு - கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியீடு
இரவு 9.50 மணிக்கு- கருணாநிதியின் உடல்நிலை குறித்து 3-ஆவது அறிக்கை வெளியீடு, உடல்நிலை சற்று நலிவுற்றிருப்பதாக தகவல்
10.50- மணிக்கு உடல்நிலை சீராகி வருவதாக காவேரி மருத்துவமனை 4 -ஆவது அறிக்கை வெளியிட்டது.
11.20 மணிக்கு- தொண்டர்களை தடியடி நடத்தி கலைத்தனர்
11.30 மணிக்கு- சேலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு முதல்வர் எடப்பாடி சென்னை விரைந்தார்
ஜூலை 30 - காலை 12 மணிக்கு முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் காவேரி மருத்துவமனைக்கு வருகை
ஜூலை 31- காலை 11 மணிக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர், இலங்கை அதிபர் சிறிசேனாவின் கடிதத்துடன் மருத்துவமனைக்கு வருகை
ஜூலை 4 மணிக்கு- ராகுல் காந்தி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரிப்பு. அவர் சந்தித்த போது கருணாநிதி கண் திறந்து பார்த்த படம் வெளியானது
இரவு 7.30 மணிக்கு- 5-ஆவது அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருவதாக தகவல்
இரவு 9மணிக்கு - நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு வந்தார்
ஆகஸ்ட் 2- காலை 10 மணி- கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டது
ஆக.5- மதியம் 2. 50 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை
ஆக.6 - மதியம் 12.50 மணிக்கு முதல் முறையாக தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வருகை
மாலை 6.30 மணிக்கு- கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏறபட்டதாகவும் 24 மணி நேரம் கழித்தே உடல்நிலை குறித்து கூற முடியும் என்றும் 6-ஆவது அறிக்கை வெளியானது
7மணிக்கு - தொண்டர்கள் மருத்துவமனைக்கு குவிய தொடங்கினர்
ஆக.7 - ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு ஆகியன குறைந்த அளவில் இருப்பதாக தகவல்
4.00 மணிக்கு - ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்
4.30 மணிக்கு- கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக 7-ஆவது அறிக்கையை வெளியிட்டுள்ளது மருத்துவமனை
6 மணி- தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
6.10 மணிக்கு - கருணாநிதி மறைந்தார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது