கட்டுப்பாட்டு டவரில் மோதிய திருச்சி ஏர்இந்தியா விமானம்.. எப்படி நடந்தது? அதிகாரிகள் குழப்பம்!
திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் சிறிய விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
Recommended Video

திருச்சி: திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் கட்டுப்பாட்டு கோபுரத்தின் மீது மோதியது எப்படி என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
அதிகாலை 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. திருச்சியில் இருந்து அந்த ஏர்இந்தியா விமானம் துபாய் நோக்கி சென்றுள்ளது. இந்த விமானம் விமான நிலையத்தின் முடிவில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரமான ஏடிசி டவர் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம்) மீது மோதியுள்ளது.
உள்ளே 130 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் இருந்துள்ளனர். இதனால் நிலைதடுமாறி கொஞ்சம் சுற்று சுவரில் இடித்துள்ளது. அதன்பின் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
[ நிலைதடுமாறி கட்டுப்பாட்டு டவர் மீது மோதிய ஏர்இந்தியா விமானம்.. திருச்சியில் பரபரப்பு!]

அனைவரும் பாதுகாப்பு
மும்பையில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 130 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். இவர்கள் வேறு விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பப்பட இருக்கிறார்கள்.
|
எப்படி நடந்தது
ஆனால் இது எப்படி நடந்தது என்று தெரியாமல் அதிகாரிகள் இன்னும் குழம்பி வருகிறார்கள். மூன்று முறை அதிகாரிகள் இந்த விபத்து நடந்த இடத்தை சோதனை செய்துவிட்டனர். ஆனாலும் எதனால் விமானம் சம்பந்தம் இல்லாமல் கட்டுப்பாட்டு டவரின் மீது மோத வேண்டும். எப்படி விமானம் அவ்வளவு நெருக்கமாக சென்றது என்று சோதனை செய்து வருகிறார்கள்.

ஏன் தாழ்வு
அதேபோல் விமானம், கட்டுப்பாட்டு கோபுரத்தில் இடிக்கும் அளவிற்கு எப்படி தாழ்வாக சென்றது என்றும் சோதனை செய்து வருகிறார்கள். திருச்சி விமான நிலையை ஓடு பாதை போதிய நீளம் கொண்டதுதான். ஆனாலும் கூட எப்படி இந்த சம்பவம் நடந்தது என்று தெரியாமல் குழம்பி போய் இருக்கிறார்கள்.
|
என்ன டவர்
இந்த டவர் ஏடிசி டவர் என்று அழைக்கப்படும் ஏர் டிராபிக் கண்ட்ரோல் எனப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் ஆகும். இதை வைத்துதான் விமான போக்குவரத்து நெரிசலை ஒவ்வொரு விமான நிலையத்திலும் சமாளிப்பார்கள். எந்த விமானம் எப்போது புறப்பட வேண்டும், எது எப்போது உள்ளே வர வேண்டும் என்று தீர்மானிப்பார்கள். இதில்தான் அந்த விமானம் மோதியுள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications