குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டமசோதா!!
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் நிரந்தர சட்டமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த சட்ட மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக சட்டசபையின் சிறப்புக்கூட்டம் கூடியது. அப்போது ஜல்லிக்கட்டு மீது தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம், சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. இந்நிலையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டமசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதனை அனுப்பி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications