குடியரசு தினம்: சென்னை காந்தி சிலையில் தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால்!
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றினார்.
Recommended Video

சென்னை: நாட்டின் 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றினார்.
நாட்டின் 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் மெரினா கடற்கரை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அந்த பகுதியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 69வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதேநேரம் குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைதொடர்ந்து உள் துறை அமைச்சகம் சார்பில், அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரியாதை செலுத்தினார்.
ஆளுநருடன் முப்படை அதிகாரிகளும் போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து காந்தி சிலை அருகே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேற்றினார். இதில்
முதல்வர், துணை முதல்வர், தலைமைச்செயலாளர், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்ற முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும், மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது?












Click it and Unblock the Notifications