அனைவர் வாழ்விலும் வளம் பெருகட்டும்.. ஆளுநர், முதல்வர் தீபாவளி வாழ்த்து!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பன்வாரிலால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அறியாமைக்கு எதிரான ஞானத்தின் வெற்றி, சுயமுன்னேற்றம், அகந்தையை அகற்றுதல், வெறுப்புணர்வை குறைத்தல் ஆகியவற்றை தீபாவளி குறிக்கிறது.

தீபங்களின் திருநாள் தீமைக்கு எதிரான வெற்றியை கொண்டு வருகிறது. தீபாவளி சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதாகவும், தூய்மையான முன்னேற்றம் அடைந்த இந்தியாவை உருவாக்க வழிநடத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி கூறியுள்ளதாவது: தமிழக மக்கள் அனைருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள். மறம் வீழ்ந்து அறம் வென்ற நாளாகவும் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகிடும் நன்னாளாகவும் தீபாவளி திகழ்கிறது. தித்திக்கும் தீபாவளி திருநாளில் அனைவரது வாழ்விலும் நலமும் வளமும் பெருகட்டும். இருள் அகன்று மகிழ்ச்சி ஒளிச்சுடர் பரவட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications