பாலூட்டும் தாய்மார்களுக்கு பேருந்து நிலையங்களில் தனி அறைகள்: ஆக.3ல் திறப்பு?
சென்னை: பேருந்து நிலையங்களில் இன்று திறக்கப்படுவதாக இருந்த பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் வரும் 3ம் தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவினால் இன்று திறக்கப்படுவதாக இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பயணம் மற்றும் பணி நிமித்தமாக பாலூட்டும் தாய்மார்கள் வெளியே செல்லும் போது, பேருந்து நிலையங்களில் சில மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளைகளில் குழந்தைகளுக்கு தனிமையில் பாலூட்டுவதற்கு வசதியாக அரசு பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் தனி அறைகள் அமைக்கப்படும் என்று கடந்த மாதம் 3ம்தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

தாய்ப்பால் வார விழாவையொட்டி, ஆகஸ்டு 1ம்தேதி முதல் தனி அறைகளை திறக்க திட்டமிடப்பட்டு, தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.
ஆசியாவிலேயே மிக பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றான சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை அமைக்கும் பணி பேருந்து நிலையத்தின் பிரதான நுழைவுவாயில் அருகிலும், 4வது நடைமேடை முகப்பிலும் நடைபெற்றது.
ஒரு அறையில் 7 பேர், மற்றொரு அறையில் 8 பேர் என மொத்தம் 15 தாய்மார்கள் சொகுசு இருக்கையில் உட்கார்ந்து தங்களுடைய குழந்தைகளுக்கு பாலூட்டும் வகையில் குளு, குளு வசதியுடன் அறைகள் தயார்படுத்தப்பட்டது. சுத்தமான குடிநீர் வசதி, குழந்தைகளுக்கு உடைமாற்றுவதற்கு என்று சிறிய அறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டது.
தாய்ப்பால் வார விழா தொடக்க நாளான இன்று(சனிக்கிழமை) பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்துல் கலாம் மறைவால் தமிழக அரசு கடந்த 27ம்தேதி முதல் ஆகஸ்டு 2ம்தேதி வரை ஒரு வாரம் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளதால், பஸ் நிலையங்களில் தாய்மார்களுக்கு தனி அறை திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அறைகள் திறப்பு நிகழ்ச்சி 3ம்தேதி நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும், நிகழ்ச்சியின்றி தானாகவே பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை திட்டமிட்டப்படி இன்று பயன்பாட்டுக்கு கொண்டு வரலாமா? என்ற பரிசீலனையும் தமிழக அரசிடம் உள்ளதாக சி.எம்.டி.ஏ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications