பாலூட்டும் தாய்மார்களுக்கு பேருந்து நிலையங்களில் தனி அறைகள்: ஆக.3ல் திறப்பு?
சென்னை: பேருந்து நிலையங்களில் இன்று திறக்கப்படுவதாக இருந்த பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் வரும் 3ம் தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவினால் இன்று திறக்கப்படுவதாக இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பயணம் மற்றும் பணி நிமித்தமாக பாலூட்டும் தாய்மார்கள் வெளியே செல்லும் போது, பேருந்து நிலையங்களில் சில மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளைகளில் குழந்தைகளுக்கு தனிமையில் பாலூட்டுவதற்கு வசதியாக அரசு பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் தனி அறைகள் அமைக்கப்படும் என்று கடந்த மாதம் 3ம்தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

தாய்ப்பால் வார விழாவையொட்டி, ஆகஸ்டு 1ம்தேதி முதல் தனி அறைகளை திறக்க திட்டமிடப்பட்டு, தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.
ஆசியாவிலேயே மிக பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றான சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை அமைக்கும் பணி பேருந்து நிலையத்தின் பிரதான நுழைவுவாயில் அருகிலும், 4வது நடைமேடை முகப்பிலும் நடைபெற்றது.
ஒரு அறையில் 7 பேர், மற்றொரு அறையில் 8 பேர் என மொத்தம் 15 தாய்மார்கள் சொகுசு இருக்கையில் உட்கார்ந்து தங்களுடைய குழந்தைகளுக்கு பாலூட்டும் வகையில் குளு, குளு வசதியுடன் அறைகள் தயார்படுத்தப்பட்டது. சுத்தமான குடிநீர் வசதி, குழந்தைகளுக்கு உடைமாற்றுவதற்கு என்று சிறிய அறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டது.
தாய்ப்பால் வார விழா தொடக்க நாளான இன்று(சனிக்கிழமை) பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்துல் கலாம் மறைவால் தமிழக அரசு கடந்த 27ம்தேதி முதல் ஆகஸ்டு 2ம்தேதி வரை ஒரு வாரம் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளதால், பஸ் நிலையங்களில் தாய்மார்களுக்கு தனி அறை திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அறைகள் திறப்பு நிகழ்ச்சி 3ம்தேதி நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும், நிகழ்ச்சியின்றி தானாகவே பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை திட்டமிட்டப்படி இன்று பயன்பாட்டுக்கு கொண்டு வரலாமா? என்ற பரிசீலனையும் தமிழக அரசிடம் உள்ளதாக சி.எம்.டி.ஏ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications