சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி ஏரியில் இருந்து மழைநீர் குபுகுபுவென வெளியேறுவதாக மக்கள் புகார்
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள தாங்கல் ஏரியிருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கூடுவாஞ்சேரியில் உள்ள தாங்கல் ஏரியிலிருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி வருகிறது.
வடகிழக்கு பருவமழையால் நேற்று முதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கனமழையால் பல்வேறு நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கூடுவாஞ்சேரியில் உள்ள தாங்கல் ஏரியிலிருந்து மழைநீர் வெளியேறி வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இங்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேபோல் நந்திவரம் ஏரியிலிருந்தும் தண்ணீர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு கூடுவாஞ்சேரி ஏரி உடைந்ததால் ஊரபாக்கம், தாம்பரம் , முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications