Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“நீதிமன்றத்தை பரப்புரை மேடையாக்க வேண்டாம்”.. கோயில் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோயிலில், அரசு உரிய வசதிகளை செய்து தரக்கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தை பரப்புரை மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பால்சுனை கண்ட சிவன் கோயிலில், அரசு உரிய வசதிகளை செய்து தரக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

HC Madurai Bench Observes Courts Should Not Be Used as Platforms for Propaganda in Temple Case

கோயிலில் பக்தர்களுக்கு மேற்கூரை வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூடுதல் வசதிகள் செய்ய தயாராக இருப்பதாகவும் அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கோயிலில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு உரிய வசதிகளை செய்துள்ளது, நீதிமன்றத்தை பரப்புரை மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து சமீப நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+