வைகோ மீதான பொடா வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை!
சென்னை: ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்பட 9 பேர் மீது தொடரப்பட்ட பொடா வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மதுரை திருமங்கலத்தில் நடந்த ம.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்தை ஆதரித்து பேசியதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ உட்பட 9 பேர் மீது கியூ பிரிவு போலீசார் பொடா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் வைகோவை 2002-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்த பின்னர், இந்த வழக்கு பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், வைகோ மீது பதிவு செய்யப்பட்ட பொடா சட்டப் பிரிவுகளை வாபஸ் பெறுவதாகவும், பிற சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீதான வழக்கை நடத்துவதாகவும் அப்போதைய அரசு வக்கீல் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை பூந்தமல்லி சிறப்பு பொடா கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வைகோ வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் தேவதாஸ் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, பூந்தமல்லி பொடா கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வரும் வைகோ மீதான பொடா வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications