விழுப்புரத்தில் விஷ ஊசி போட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை
விழுப்புரம்: விழுப்புரத்தில் விஷ ஊசி போட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் வி.மருதூர் தர்மராஜா தெருவை சேர்ந்தவர் நாகராஜன், 42. இவர் கடந்த ஆண்டு விழுப்புரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஏட்டாக பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

லஞ்ச ஒழிப்பு போலீசில் பணியாற்றியபோது ஜனார்த்தனன் என்ற பெயரில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே கருணாநிதி நகரில் உள்ள ஜாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். பணி மாற்றத்துக்குப்பின்னரும் அதே அறையில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அறைக்கு திரும்பிய அவர் டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு தூங்கினார். இன்று காலை வெகுநேரமாகியும் நாகராஜன் தங்கியிருந்த அறைக்கதவு திறக்கப்படவில்லை.
சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நாகராஜன் விஷஊசி போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து விடுதியின் மேலாளர் விழுப்புரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் நாகராஜின் உடலை பிரேதபரிசோதனைக்காக முண்டியபக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த நாகராஜ் கடந்த 28ம் தேதி அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு கடந்த 4ம் தேதி காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு பணியில் சேர்ந்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்து அவர் என் விடுவிக்கப்பட்டார் என காரணம் தெரியவில்லை. நாகராஜ் தற்கொலைக்கு மேல் அதிகாரிகளின் தொல்லை காரணமா இல்லை வேறு காரணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் துணை காவல் ஆணையராக இருந்த கர்நாடகாவை சேர்ந்த இளம் ஐ.பி.எஸ் . அதிகாரி என்.ஹரிஷ் சில மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கடந்த 2015ம் ஆண்டு நாமக்கல் டி.எஸ்.பி. விஷ்னுபிரியா தூக்குப் போட்ட நிலையில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார்.
தாராபுரத்தில் பெண் காவலர் உள்ளிட்டோர் வரிசையில் தற்போது தலைமை காவலர் நாகராஜ் தற்கொலை செய்துகொண்டிருப்பது தமிழக காவல் துறையில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications