விழுப்புரத்தில் விஷ ஊசி போட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை
விழுப்புரம்: விழுப்புரத்தில் விஷ ஊசி போட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் வி.மருதூர் தர்மராஜா தெருவை சேர்ந்தவர் நாகராஜன், 42. இவர் கடந்த ஆண்டு விழுப்புரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஏட்டாக பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

லஞ்ச ஒழிப்பு போலீசில் பணியாற்றியபோது ஜனார்த்தனன் என்ற பெயரில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே கருணாநிதி நகரில் உள்ள ஜாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். பணி மாற்றத்துக்குப்பின்னரும் அதே அறையில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அறைக்கு திரும்பிய அவர் டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு தூங்கினார். இன்று காலை வெகுநேரமாகியும் நாகராஜன் தங்கியிருந்த அறைக்கதவு திறக்கப்படவில்லை.
சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நாகராஜன் விஷஊசி போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து விடுதியின் மேலாளர் விழுப்புரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் நாகராஜின் உடலை பிரேதபரிசோதனைக்காக முண்டியபக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த நாகராஜ் கடந்த 28ம் தேதி அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு கடந்த 4ம் தேதி காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு பணியில் சேர்ந்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்து அவர் என் விடுவிக்கப்பட்டார் என காரணம் தெரியவில்லை. நாகராஜ் தற்கொலைக்கு மேல் அதிகாரிகளின் தொல்லை காரணமா இல்லை வேறு காரணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் துணை காவல் ஆணையராக இருந்த கர்நாடகாவை சேர்ந்த இளம் ஐ.பி.எஸ் . அதிகாரி என்.ஹரிஷ் சில மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கடந்த 2015ம் ஆண்டு நாமக்கல் டி.எஸ்.பி. விஷ்னுபிரியா தூக்குப் போட்ட நிலையில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார்.
தாராபுரத்தில் பெண் காவலர் உள்ளிட்டோர் வரிசையில் தற்போது தலைமை காவலர் நாகராஜ் தற்கொலை செய்துகொண்டிருப்பது தமிழக காவல் துறையில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications