சென்னையில் மீண்டும் வெளுத்து வாங்கிய மழை... இன்றும் நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு
சென்னை : புறநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்ததால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வெப்பச் சலனம் காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, புறநகர்ப் பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

பகல் நேரங்களில் வெயில் சற்று காட்டத்தைக் காட்டினாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வெப்பத்தை தணிக்கிறது. நேற்று நள்ளிரவிலும் சென்னையின் வடபழனி, கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்தது.
இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்றும் (புதன்கிழமை) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக செ
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரைப் பொருத்த வரை, வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications