For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் 3 ஆவது நாளாக தொடரும் கனமழை – புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து 3 ஆவது நாளாக பெய்து வரும் கனமழையால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. கனமழை தொடர்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பல இடங்களில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிவுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Heavy rain falls in Chennai, meteorological center says…

சென்னையில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. மேலும், சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். இதுகுறித்து பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 3 தினங்களாக பெய்த மழையால் சென்னை அன்றாட வாழ்கையில் சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

நீர்தேக்கத்தை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். தமிழகம் மற்றும் இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English summary
Heavy rain in Chennai and this rain falls will continue today also, Tamil Nadu meteorological research center says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X