சென்னையில் கொட்டிய மழை... தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து... ஒருவர் பலி
ரெட்டேரியில் சாலையில் தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் கனமழை பெய்து வருவதால் ரெட்டேரியில் சாலையில் தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து மோதி தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் பலியானார்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் மழை மிரட்டி வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் ரெட்டேரி நோக்கி மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
திடீரென பிரேக் பிடித்த போது சாலையில் இருந்த தண்ணீரால் பேருந்து தாறுமாறாக ஓடியது. அப்போது பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் ரவிச்சந்திரன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications