தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருகிறது. நேற்று டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது.

நேற்று மாலைக்கு பின் நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரையில் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதேபோல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில் இன்றிலிருந்து மழை தீவிரமாக பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை என மொத்தமாக 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.












Click it and Unblock the Notifications