தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகையில் பேய்மழை- புதுச்சேரியிலும் கனமழை- விடுமுறை அறிவிப்பு!
தஞ்சாவூர்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை மூழ்கடித்த கனமழை தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வருகிறது. கடலூர், நாகை, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தற்போது வரை அடைமழை கொட்டுகிறது. புதுச்சேரியிலும் பெரும்மழை கொட்டி வருகிறது.
வரலாறு காணாத பருவமழையால் தலைநகரம் சென்னையே மூழ்கிப் போய் தனித் தனி தீவுகளானது. இந்த மழை நேற்று முதல் தணியத் தொடங்கியதால் சென்னை நகரில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. ஆனால் சென்னை புறநகரில் வெள்ளம் உடனடியாக வடிந்து விடாத அளவுக்கு பல அடி உயரத்துக்கு நீர் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூரில் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இம்மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் கொட்டிவரும் கனமழையால் கெடிலம் ஆற்றில் 30,000 கனடி நீர் ஓடுகிறது. மேலும் வீராணம் ஏரி வேகமாக நிரம்புவதால் எப்போது வேண்டுமானாலும் ஏரி திறக்கப்படும் நிலை இருக்கிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications