தூத்துக்குடிக்குக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் மதிப்பு செம்மர கட்டைகள்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு கடத்திவரப்பட்ட பல லடசம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்ய முடியாமல் மாவட்ட நிர்வாகம் திண்டாடி வருகிறது.

தூத்துக்குடி எஸ்பி அலுவலகம் அருகே உள்ள மாதவன் நகரில் ஓரு குடோனில் வைக்கப்பட்டிருந்த கன்டெய்னரை எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர். அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 மெட்ரிக் டன் எடையிலான செம்மரகட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

Hoarding of Red wood: District Administration in trouble

இவை தூத்துக்குடி வழியாக துபாய்க்கு கடத்தப்பட இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை போலீசார் வனத்துறையினரிடம் ஓப்படைத்தனர். இந்த செம்மரக் கடத்தலில் அமெரிக்க ஆயுத கப்பலில் தொடர்புடைய சிலருக்கு தொடர்பு இருப்பது கூட தெரிந்தும் வனத்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இதில் தொடர்பு இல்லாத சிலரை கைது செய்ததாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் நான்கு கன்டெய்னரில் மேலும் செம்மரகட்டைகள் கடத்தி வரப்பட்டு தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இவற்றின் மதிப்பு ரூ.10 கோடிக்கும் மேல் இருக்கும். ஆனால் சம்பந்தப்பட்டதுறைகளை சேர்ந்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தவில்லை.

இந்நிலையில், செம்மரகட்டைகளை துபாய்க்கு வேறு பொருட்களுடன் போலி பில்கள் தயாரித்து கடத்த இருப்பதாக சுங்கதுறைக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் உடனடியாக சோதனையை தீவிரப்படுத்தினர். இதனால் கடத்தல் புள்ளிகள் கன்டெய்னரை விட்டு விட்டு தப்பி சென்றனர். சுங்கதுறை அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+