ரூ500, ரூ1,000 நோட்டுகளை முன்வைத்து கொள்ளை கோதாவில் குதித்த மருத்துவமனைகள்!
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை பயன்படுத்தி மருத்துவமனைகளும் கொள்ளை கோதாவில் குதித்துள்ளன.
சென்னை: ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததுதான் தாமதம்... இதைவைத்து எப்படியெல்லாம் சம்பாதிப்பது என்பதில் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் என்ற போட்டிதான்.
நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்றபோதும் அடுத்த 72 மணிநேரத்துக்கு மருத்துவமனைகள், மருந்தகங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் இவை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்தது. நடைமுறையில் இங்கு ரூ500, ரூ1,000 வாங்கிக் கொள்ளப்படுகிறது.

அதே நேரத்தில் ஒரு ஸ்கேனுக்கு ரூ900 என நேற்று கட்டணத்தை நிர்ணயித்த நிறுவனங்கள் இன்று சில்லறை இல்லை என்பதால் ரூ1,000 என லம்ப்பாக வசூலிக்கின்றன.
மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் ரூ350தான் கட்டணம் என்றாலும் சில்லறை இல்லையே என்ற பல்லவியைப் பாடி மீதி தொகையை அமுக்குவதிலேயேதான் ஆலாய் பறக்கின்றனர்.
புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் இருந்து மாற்றுவதற்குள் மருத்துவமனைகளும் மருந்தகங்களும் உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்தே ஒருநாள் வியாபாரத்தை எளிதாக கல்லா கட்டிவிடும் நிலைதான் உருவாகி உள்ளது.
மத்திய அரசு என்னதான் விதிவிலக்கு என அறிவித்தாலும் இது தொடர்பாக புகார் தெரிவிக்க எந்த ஒரு ஏற்பாடும் செய்யாததால் ஏழை நடுத்தர மக்களின் பணத்தை கபளீகரம் செய்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள் என்பது பொதுமக்களின் ஆதங்கம்.












Click it and Unblock the Notifications