வீட்டிலேயே மதுக்கடை... இரவோடு இரவாக திறக்கப்பட்டதால் மக்கள் கொந்தளிப்பு... முற்றுகையிட்டு போராட்டம்
தெருக்களில் மதுக்கடையை திறப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் சூழலில் வீட்டிலேயே மதுக்கடையை இரவோடு இரவாக திறக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தஞ்சை: குடியிருக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதைக் கண்டித்து கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பந்தநல்லூர் ஊராட்சியில் இயங்கி வந்த இரண்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதனை பக்கத்து ஊராட்சியான கருப்பூர் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் புதிய வீட்டை கட்டி அதில் டாஸ்மாக் கடை இரவோடு இரவாக திறக்கப்பட்டுள்ளது.
வீட்டில் திறக்கப்பட்ட அந்த கடையை இன்று திறக்கவிடாமல் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கொளுத்தும் வெயிலில் பந்தல் அமைத்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். குடியிருக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதைக் கண்டித்து கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நிர்பந்தம்
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனால் அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டிய நிர்பந்தத்திற்கு அரசு ஆளானது.

எதிர்ப்பு
நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட கடைகளை ஊருக்குள் மீண்டும் திறக்க மாநில அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடைகளை திறக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உருப்படுமா?
இந்நிலையில், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பந்தநல்லூர் ஊராட்சியில் வீட்டில் டாஸ்மாக் திறக்கப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது. பெரும் அவமானத்திற்குரிய இந்த சம்பவத்தை எதிர்த்து ஊர் பொதுமக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீட்டிலேயே டாஸ்மாக்கை திறக்கும் நாடு உருப்படுமா என்று பெண்கள் கேள்வி கேட்கின்றனர்.

முற்றுகை
இந்த மதுக்கடையை திறக்கக் கூடாது என்று பந்தநல்லூர், கீழ்மாந்தூர், கருப்பூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ஓரணியாக திரண்டு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தை காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். திருவிடைமருதூர் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. வீட்டில் இறக்கப்பட்ட மதுபாட்டில்களை அகற்றும் வரை நகரமாட்டோம் என்று ஊர் மக்கள் உறுதியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications