22 மீனவர்களை உடனே விடுதலை செய்த இலங்கை: ராமேஸ்வரத்தில் 'டேரா' போட்டு சாதித்தது யார்- ஏன் தெரியுமா?
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை உடனடியாக விடுதலை செய்து அனுப்பி வைத்திருப்பது ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை ராஜ், கேசியர் ஆகியோரின் 2 படகுகள், கோடியக்கரையில் இருந்து கடந்த 15-ந் தேதி மீன்பிடிப்புக்காக சென்றன. இந்த 2 படகுகளில் மொத்தம் 22 மீனவர்கள் சென்றனர். கடலில் தங்கி மீன்பிடிக்க மீனவர்கள் சென்றிருந்தனர். இந்த 22 மீனவர்களும் பாம்பன், தங்கச்சி மடத்தைச் சேர்ந்தவர்கள்.

22 மீனவர்கள் கைது: இந்த நிலையில் கோடியக்கரை- இலங்கையின் பருத்திதுறை இடையே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படை 22 மீனவர்களையும் சுற்றி வளைத்தது. தங்களது நாட்டு எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி 22 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றது. இந்த தகவல் ராமேஸ்வரம் மீனவர்களை கொந்தளிக்க வைத்தது. பொதுவாக தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டால் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும். நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்படுவர். ஆனால் இம்முறை 22 மீனவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை: இது தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகையில், சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் பங்கேற்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமேஸ்வரம் வருகை தந்திருந்தார். அப்போது ராமேஸ்வரம் நாட்டு படகு மீனவர் சங்கத் தலைவர் ராயப்பன் தலைமையில் மீனவர்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தினர். அத்துடன் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 133 மீன்பிடி படகுகளை மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர் என்றனர்.
நிர்மலா சீதாராமன் தலையீடு: இந்த சந்திப்புகளின் போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 22 தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேசி இருக்கிறேன். அனைத்து மீனவர்களும் விரைவில் ராமேஸ்வரம் திரும்புவர் என உறுதி அளித்தார்.
உடனே விடுதலை: இதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரையும் 2 படகுகளுடன் விடுதலை செய்வதாக அறிவித்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தது. இதனால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மீனவர் சங்க பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.
ராமநாதபுரம் சீட் குறி?: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என்கிற பேச்சு ஏற்கனவே உள்ளது. இது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமேஸ்வரம் வந்த நிலையில் இலங்கை கடற்படை 22 மீனவர்களை கைது செய்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையீட்டில் 22 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் பாஜகவுக்கு பெரிதும் கை கொடுக்கும் என்பது அக்கட்சியினர் நம்பிக்கை.
-
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications