கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்.. கமல்ஹாசன் டிவிட்
நடிகர் கமல்ஹாசன் கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை நடிகர் கமல்ஹாசன் கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மத்திய மாநில அரசுகளையும் விளாசி வருகிறார் கமல்ஹாசன்.
இந்நிலையில் நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தடுக்க நான் தயார் என தெரிவித்துள்ளார்.
மேலும் நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி என்றும் நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல் என்றும் நீர் நம்பும் ஆண்டவன் செயல் அல்ல என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு.
— Kamal Haasan (@ikamalhaasan) November 29, 2017
அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது.
நாமும் அதைச் சகிக்கலாகாது
பக்தர்களில் பல வகை உண்டு, அனைவரும் என் கேளிர் என்றும் கமல் தெரிவித்துள்ளார். மேலும் ஆனால் சாதி அதைசகியாது என்றும் நாமும் அதைச் சகிக்கலாகாது என்றும் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.