தேக்கமலை, மகாலட்சுமியை நான் கடத்தியதாக அளிக்கப்பட்ட புகார் பொய்யானது: திவ்யபாரதி!
துப்புரவு பணியாளர்கள் தேக்கமலை மற்றும் மகாலட்சுமியை தான் கடத்தியதாக அளிக்கப்பட்ட புகார் பொய்யானது என ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி தெரிவித்துள்ளார்.
மதுரை: துப்புரவு பணியாளர்கள் தேக்கமலை மற்றும் மகாலட்சுமியை தான் கடத்தியதாக அளிக்கப்பட்ட புகார் பொய்யானது என ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி தெரிவித்துள்ளார்.
'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குநரும் சமூக ஆர்வலருமான திவ்யபாரதி மீது திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தைச் சேர்ந்த கார்த்திகாதேவி என்பவர் மதுரையிலுள்ள ஐ.ஜி-யிடம் புகார் அளித்தார். அதில் திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் தினக்கூலி துப்புரவுப்பணியாளராக பணிபுரிந்து வந்த தேக்கமலையும் அவர் மனைவி மகாலட்சுமியையும் திவ்ய பாரதி கடத்தி வைத்துள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் மதுரையில் தேக்கமலை மற்றும் மகாலட்சுமியுடன் ஆவணப்பட இயக்குநரான திவ்யபாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேக்கமலையையும் மகாலட்சுமியையும் நான் கடத்தியதாக பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தங்களை யாரும் கடத்தவில்லை என்று தேக்கமலை மகாலட்சுமி தம்பதியினர் கூறியுள்ளனர். பணியில் இருந்து நீக்கப்பட்டதால் வெளியூர் சென்றதாகவும் அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications