For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யாரும் கருத்து சொல்லக்கூடாது- தம்பிதுரை

எச்.ராஜா, எஸ்.வி சேகர் கருத்துகளை நான் இன்னும் பார்க்கவில்லை அதனால் கருத்து கூற விரும்பவில்லை என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    பெண் பத்திரிகையாளர்களை பற்றி கேவலாமாகப் பேசிய எஸ்.வி சேகர்- வீடியோ

    கோவை: எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகரின் கருத்துகளை நான் பார்க்காததால் அதுகுறித்து கருத்து கூற விரும்பில்லை என்று லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதி குறித்து பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்து இருப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமில்லாது பொதுமக்களும் எச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    I Did not see H Raja and SV shekher tweets says Thambidurai

    அதே நேரம் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டிய தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவிட்ட பெண் பத்திரிகையாளரையும் பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் இழிவுபடுத்தி பதிவிட்டு இருந்தார். இதற்கும் கண்டனம் வலுத்து வருகிறது.

    இந்நிலையில், கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அதிமுக மூத்த தலைவரும், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகரின் கருத்துகளை ட்விட்டரில் இன்னமும் பார்க்கவில்லை.

    அதனால் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    English summary
    I Didnt see H Raja and SV shekher tweets says Thambidurai. Loksabha Deputy Speaker Thambidurai says that, So far i didnt see H Raja and SV shekher Tweets so i cant answer for the questions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X