மதுரை மாநகராட்சி தீர்மானம் தனக்கு கிடைத்த வெற்றி: மு.க.ஸ்டாலின்
திருநெல்வேலி: மதுரை மாநகராட்சியில் இயற்றப்பட்ட தீர்மானம், தமது பயணத்தின் வெற்றிக்கு எடுத்துக்காட்டு என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரையில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்ள இருக்கும் "நமக்கு நாமே" பயணத்தால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என மதுரை மாநகர மேயர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். அதனாலேயே, அதற்கு அனுமதி வழங்கக்கூடாது என அதிமுக உறுப்பினர்கள் சார்பில் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ராஜன் செல்லப்பா குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரியைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ளார். 3வது நாள் சுற்று பயணமாக இன்று காலை நெல்லை மாவட்டம் பணகுடிக்கு வந்தார். அப்போது அவருக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள செங்கல் சூளை தொழிலாளர்களை சந்தித்தார். முன்னதாக அவர் செங்கல் சூளையில் செங்கல் தயாரிப்பது எப்படி? என்பதை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து அங்கிருந்த தொழிலாளர்களிடம் நலம் விசாரித்தார். அப்போது செங்கல்சூளை நிர்வாகி ஒருவர் மு.க. ஸ்டாலினிடம், தற்போது மூலப்பொருட்கள் விலை உயர்வால் செங்கல் உற்பத்தி தொழில் நலிவடைந்து விட்டது என்று கூறினார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் தொழிலாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், நமக்கு நாமே விடியல் மீட்பு சுற்றுப்பயணம் நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் தொடங்கினேன். இன்று 3வது நாளாக நெல்லை மாவட்டத்திற்கு வந்துள்ளேன். இங்கு செங்கல் சூளையில் எப்படி வேலை பார்க்கிறீர்கள்? உங்களின் சூழ்நிலை என்ன? என்பதை தெரிந்து கொண்டேன். இந்த தொழில் நலிவடையாமல் இருக்க அ.தி.மு.க. அரசு முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தொழிலாளர்களை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று நாங்கள் நம்பிக்கை வைத்திருப்பதை விட மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள். நேற்று குமரி மாவட்டத்தில் பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேசினேன். அவர்கள் உங்கள் ஆட்சி எப்போது வரும்? என ஆவலோடு எதிர்பார்க்கிறோம் என்று என்னிடம் கூறினார்கள்.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி காணொலி ஆட்சி. முதல்வர் ஜெயலலிதா சட்டசபை, கோட்டைக்கு முறையாக வருவதில்லை. ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
பின்னர், ஏர்வாடிக்குச் சென்ற ஸ்டாலின், அங்கு, நியாய விலை கடைக்குச் சென்று, பொதுமக்கள் எதிர்கொள்ளும் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து, களக்காட்டிற்குச் சென்ற ஸ்டாலின், அங்கும் பொதுமக்களை சந்தித்து புகார் மனுக்களைப் பெற்றார்.
அப்போது, செய்தியாளரிடம் பேசிய அவர், மதுரை மாநகராட்சியில் இயற்றப்பட்ட தீர்மானம், தமது பயணத்தின் வெற்றிக்கு எடுத்துக்காட்டு எனக் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications