விஜயதாரணியை தரக்குறைவாக பேசவில்லை - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விளக்கம்
சென்னை: எம்.எல்.ஏ விஜயதாரணியை ஒருபோதும் தாம் தரக்குறைவாக பேசியதில்லை என்று தமிழக காங்கிரஸ்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வந்த எம்.எல்.ஏ.விஜயதாரணி மாநிலத் தலைவர் இளங்கோவனை சந்தித்தார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாளை ஒட்டி கட்சி அலுவலகத்தில் தான் வைத்த பேனரை சிலர் அகற்றிவிட்டதாக இளங்கோவனிடம் புகார் கூறினார். மேலும், அந்த பேனர் அலுவலகத்தில் உள்ள கழிவறையில் வீசப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

விஜயதாரணி புகார்
தன்னை இழிவுபடுத்தும் இந்த செயலலில் ஈடுபட்டவர்கள் மீது கட்சித் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். ஆனால், அதற்கு இளங்கோவன் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஜயதாரணி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இளங்கோவனிடம் வாக்குவாதம்
இளங்கோவனுக்கும் விஜயதாரணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் போது இளங்கோவன் தன்னை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததாக விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.

சோனியாவிற்கு கடிதம்
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். பெண் என்றுகூட பாராமல் தரக்குறைவான வார்த்தைகளால் தன்னை விமர்சித்த ஈவிகேஎஸ் இளங்கோவனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார். அவரது கோபத்தால் கட்சிக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்படக்கூடும் எனவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறுப்பு
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தாம் ஒருபோதும் எம்.எல்.ஏ விஜயதாரணியை தரக்குறைவாக பேசவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். எப்போதும் பெண் நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதில்லை என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். எது எப்படியோ சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் கலாட்டா வேடிக்கையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications