வேட்டியை மடித்து கட்டினேனு வை... நானும் ரௌடிதான்... நானும் ரௌடிதான்... ஹெச்.ராஜா
வேட்டியை மடித்து கட்டினால் நானும் ரௌடிதான் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video
காரைக்குடி : வேட்டியை மடித்து கட்டினால் நானும் ரௌடிதான் என்று காரைக்குடியில் நடந்த போராட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கடந்த 6-ஆம் தேதியை தலித் இஸ்லாமியர் எழுச்சி நாளாக கொண்டாடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்தது. அப்போது சென்னையில் ஒரு மாநாட்டையும் அக்கட்சி நடத்தியது.
அயோத்தியில் ராமர் கோயில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அதனால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாக சங் பரிவார் போன்ற அமைப்புகள் கூறி வருகின்றன. பெரும்பாலான புத்த விகார்களையும் சமண கோயில்களையும் இடித்து இந்து கோயில்கள் கட்டப்பட்டன என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்காக, இந்து கோயில்களை இடித்துவிட்டு புத்த விகார்களைக் கட்ட வேண்டும் என்று கூறமுடியுமா? என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
அதேபோல் குஜராத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி மணிசங்கர் அய்யர் பிரதமர் மோடியை விமர்சிக்கும் போது, இழிவான மனிதர் (நீச் ஆத்மி) என கடுமையாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு ராகுல் காந்தியே கடும் கண்டனம் தெரிவித்து அவரை மன்னிப்பு கேட்க வைத்தார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் மணிசங்கர் அய்யர் அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்து கோவில்கள் குறித்தும், பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சித்த திருமாவளவன், மணிசங்கர் அய்யர் ஆகியோரை கண்டித்து, பாஜக சார்பில் காரைக்குடியில் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது பேசிய அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா, வேட்டியை மடித்து கட்டினால் தானும் ரவுடி தான் என்றார்.