பொறுமையா இருங்க, விரைவில் முடிவு சொல்றேன்.. தீபா அறிவிப்பு
இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை, தொண்டர்களின் விருப்பங்களை தெரிந்து கொண்டு நல்ல முடிவுக்கு வரலாம் என்று இருப்பதாக தீபா கூறியுள்ளார்.
சென்னை: அம்மா அவர்கள் விட்டுச் சென்ற நற்பணிகளை தொடரவேண்டும் என்ற எண்ணத்தில் விரைவில் என்னுடைய முடிவை அறிவிப்பேன் அதுவரைக்கும் அனைவரும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஜெயலலிதா மரணமடைந்து 30 நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த தொண்டர்கள் தி. நகரில் உள்ள தீபாவின் வீடு முன்பு குவிந்தனர்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய தீபா, தான் அரசியலுக்கு வருவேன் என்றும் தன்னை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, அரசியலுக்கு வருவது பற்றிய முடிவை வெகு விரைவில் அறிவிப்பேன் என்றார்.
சசிகலா பொதுச்செயலாளர் ஆனது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவே அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்றார்.
அதிமுகவை கைப்பற்றுவீர்களா? அல்லது புதிய கட்சி தொடங்குவீர்களா என்று கேள்வி கேட்டதற்கு பதிலளித்த தீபா, இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை என்றும் தொண்டர்களிடம் கலந்து பேசி அவர்களி கருத்தை அறிந்து எனது நிலையை தெரிவிப்பேன் என்று கூறினார்.
வருங்காலத்தை மனதில் வைத்து எனது முடிவை அறிவிப்பேன் என்று கூறிய தீபா, தொண்டர்கள் சற்று பொறுமை காக்கவேண்டும் என்று கூறினார்.
சசிகலா முதல்வராகப் போவதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தீபா, சசிகலா முதல்வராவார் என்பது யூகம்தான். அவ்வாறு முதல்வரானால் தன்னுடைய விமர்சனம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications