பொறுமையா இருங்க, விரைவில் முடிவு சொல்றேன்.. தீபா அறிவிப்பு
இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை, தொண்டர்களின் விருப்பங்களை தெரிந்து கொண்டு நல்ல முடிவுக்கு வரலாம் என்று இருப்பதாக தீபா கூறியுள்ளார்.
சென்னை: அம்மா அவர்கள் விட்டுச் சென்ற நற்பணிகளை தொடரவேண்டும் என்ற எண்ணத்தில் விரைவில் என்னுடைய முடிவை அறிவிப்பேன் அதுவரைக்கும் அனைவரும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஜெயலலிதா மரணமடைந்து 30 நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த தொண்டர்கள் தி. நகரில் உள்ள தீபாவின் வீடு முன்பு குவிந்தனர்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய தீபா, தான் அரசியலுக்கு வருவேன் என்றும் தன்னை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, அரசியலுக்கு வருவது பற்றிய முடிவை வெகு விரைவில் அறிவிப்பேன் என்றார்.
சசிகலா பொதுச்செயலாளர் ஆனது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவே அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்றார்.
அதிமுகவை கைப்பற்றுவீர்களா? அல்லது புதிய கட்சி தொடங்குவீர்களா என்று கேள்வி கேட்டதற்கு பதிலளித்த தீபா, இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை என்றும் தொண்டர்களிடம் கலந்து பேசி அவர்களி கருத்தை அறிந்து எனது நிலையை தெரிவிப்பேன் என்று கூறினார்.
வருங்காலத்தை மனதில் வைத்து எனது முடிவை அறிவிப்பேன் என்று கூறிய தீபா, தொண்டர்கள் சற்று பொறுமை காக்கவேண்டும் என்று கூறினார்.
சசிகலா முதல்வராகப் போவதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தீபா, சசிகலா முதல்வராவார் என்பது யூகம்தான். அவ்வாறு முதல்வரானால் தன்னுடைய விமர்சனம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications